கரப்பான் பூச்சிக்கு குட்பை

என் ஃப்ரெண்டு ஒருத்தி வீட்டுக்கு போனேன்.....நுழையறப்பவே வாசப்படி மேல கால் வெக்காம குதிச்சேன் மூஞ்சிய அஷ்ட கோணலா வச்சுகிட்டே.....(ஏற்கனவே ரப்பர் வாய்னு முரளியும் பசங்களும் நக்கல்டிப்பாங்க) என் ஃப்ரெண்டு ஏண்டி இன்னுமா சின்ன பசங்க மாதி குதிச்சு குதிச்சு வர ஏன் உன் மூஞ்சி கேவலமா போயிடுச்சுனு கேட்டா.....ஒரு அசுரவதம் பண்ணிட்டேன்னு நகர்ந்தா காலுக்கு அடியில் ஒரு கரப்பான் பூச்சி சட்னியாயிடுச்சு கர்மம்......என்னமோ லலி நா என் வூட்டுக்காரர் கூட பயந்துக்க மாட்டேன்.......இந்த எழவு கராப்பான் பூச்சி சிம்ம சொப்பனமா இருக்குடின்னு சொன்னா........

ஒரு கட்ட பஞ்சயாத்து பண்ணி காலி பண்ண வெச்சா எனக்கு என்ன தருவேன்னு கேட்ட்டேன்.....அடச் சே இவ்வளவுதானா நீ என்ன கேப்பே பத்து ரூபாய்க்கும் இருபதுக்கு விக்கிற ஊசி பாசி கம்மல் மாலை கேப்பே செண்பகப்பூ கேப்பே தரேன்னு நக்கலா சொன்னா.......

மைதா மாவும் போரிங் பவுடரும் ஈக்வல் ப்ரோபோஷன்ல எடுத்து சப்பாத்தி மாவு மாதி பிசைஞ்சு ரொம்ப தண்ணி விடாம சின்ன சின்ன உருண்டையா உருட்டி நிழல்ல உலர்த்தி எடு ஃபேன் காத்துல ட்ரை ஆனவுடனே மறுநாள் எங்கெல்லாம் மிஸ்டர்.கரப்பான் இருக்காரோ அங்க போட்டு வை......கரப்பான் என்ன பல்லி கூட வராது........என் வூட்டுல ஒரு கரப்பான் பூச்சி கூட கிடையாது....நாலு மாசத்துக்குதேன் இதோட வீரியம் இருக்கும் ட்ரை பண்ணு சொன்னேன்......

இரண்டு மாசத்துக்கு அப்புறம் இன்னைக்கு போனேன்.....டி லலி நீ லூசா இருந்தாலும் உன் கரப்பு வைத்தியம் சூப்பர்டி எங்க போச்சுன்னே தெரில நிம்மதியா இருக்கு சொல்லிட்டு செண்பகப்பூ இருபது பூ குடுத்தா....
இது முரளியோட ஃப்ரெண்டு சொன்னது பட் காபிரைட்ஸ் ரிசர்வ்டு....ட்ரை பண்னுங்க பார்சல்ல கொரத்தி மாலை அனுப்புங்க மக்காஸ் :))

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment